இஸ்லாமிய வழியில் நேர்மறை சிந்தனை (Positive Thinking in Islam)
- Get link
- X
- Other Apps
இன்றைய வாழ்க்கையில் மன அழுத்தம், பயம், கவலை போன்றவை மனிதனை எளிதில் தாக்குகின்றன. ஆனால் இஸ்லாம் மனிதனை எப்போதும் நம்பிக்கையுடன், நேர்மறை சிந்தனையுடன் வாழ வழிகாட்டுகிறது.
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை – நேர்மறை சிந்தனையின் மூலாதாரம்:
“அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவருக்கு அல்லாஹ் போதுமானவன்.”
(அல் குர்ஆன் – 65:3)
1. ஒரு முஸ்லிம் எந்த சோதனையிலும்
பதற்றம் அடையாமல்.
2. அல்லாஹ் நிச்சயம் நல்ல முடிவை தருவான் என்று நம்ப வேண்டும்.
2. சோதனைகளில் கூட நல்லதை பார்க்க கற்றுக்கொள்:
இஸ்லாம் சொல்லுகிறது:
ஒவ்வொரு கஷ்டத்திற்குப் பின்னாலும் நிச்சயம் நன்மை உள்ளது
“நிச்சயமாக கஷ்டத்துடன் எளிது உள்ளது.”
(அல் குர்ஆன் – 94:6)
இந்த ஆயத்து ஒரு முஸ்லிமுக்கு நம்பிக்கை + நேர்மறை சிந்தனை அளிக்கிறது.
3. துஆ – மன அமைதிக்கும் நேர்மறை எண்ணங்களுக்கும் வழி:
துஆ செய்வது மனதை சுத்தமாக்குகிறது, நம்பிக்கையை வளர்க்கிறது.
நேர்மறை எண்ணங்களுக்கு(Positive Thinking) துஆ:
“அல்லாஹும்மா லா ஸஹ்லா இல்லா மா ஜஅல்தஹு ஸஹ்லா…”
யா அல்லாஹ்! நீ எளிதாக்காத வரை எதுவும் எளிதாகாது.
4. நன்றி (Shukr) – Positive Mindset-ன் ரகசியம்:
நம்மிடம் இருப்பதற்கு நன்றி சொன்னால்,
1. குறைவுகளை நினைத்து கவலைப்பட மாட்டோம்
2. உள்ள ஆசீர்வாதங்களை உணர்வோம்
“நீங்கள் நன்றி செலுத்தினால், நான் இன்னும் அதிகமாக தருவேன்.”
(அல் குர்ஆன் – 14:7)
5. நம்பிக்கை இழக்காதே – இது ஒரு முஸ்லிமின் அடையாளம்:
“அல்லாஹ்வின் இரக்கத்தில் நம்பிக்கை இழக்காதீர்கள்.”
(அல் குர்ஆன் – 39:53)
ஒரு முஸ்லிம் எப்போதும் Positive Thinker.
ஏனெனில் அவன் அல்லாஹ்வை நம்புகிறான்.
இஸ்லாமிய நேர்மறை சிந்தனையின் பலன்கள்:
- மன அமைதி
- பயம் குறைவு
- வாழ்க்கையில் நம்பிக்கை
- வெற்றிக்கு வழி
- இமானின் வலிமை
முடிவுரை:
Positive Thinking என்பது இஸ்லாமில் ஒரு வாழ்க்கை முறை.
அல்லாஹ்வை நம்பி, துஆ செய்து, நன்றி உணர்வுடன் வாழும் போது
1. மனமும்
2. வாழ்க்கையும்
நிச்சயம் அழகாக மாறும்.
- Get link
- X
- Other Apps
