துஆ மூலம் அபார நலன் (ரிஸ்க்) பெறும் வழி

Image
இஸ்லாமில் துஆ (دعاء) என்பது வெறும் வேண்டுகோள் அல்ல. அது அல்லாஹ்வுடன் உள்ள ஆழமான தொடர்பு, நம்பிக்கை, பொறுமை மற்றும் செயல் ஆகியவற்றின் சேர்க்கை. 1️⃣ நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும் (நிய்யத்): முதலில் உங்களுக்கு “அபார நலம்” என்றால் என்ன என்று தெளிவாக எண்ணுங்கள்: பண வசதி மன அமைதி நல்ல வாய்ப்புகள் ஆரோக்கியம் குடும்ப நலம் 👉 உங்கள் வேண்டுதல் ஹலால் (அனுமதிக்கப்பட்ட) வழியில் இருக்க வேண்டும். 2️⃣ துஆவை புகழ்ச்சியுடன் தொடங்குங்கள்: அல்ஹம்துலில்லாஹ் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் “யா அல்லாஹ், நீ அளித்துள்ள எல்லா நன்மைகளுக்கும் நான் நன்றி செலுத்துகிறேன்.”   3️⃣ அல்லாஹ்வின் அழகிய பெயர்களை பயன்படுத்துங்கள்: அபார நலனுக்கான பெயர்கள்: யா ரஸ்ஸாக் – வழங்குபவன் யா கரீம் – பேருதாரன் யா முக்னீ – செல்வமளிப்பவன் “யா ரஸ்ஸாக், என் ரிஸ்க்கின் கதவுகளை திறந்தருள்வாயாக.” 4️⃣ முழு நம்பிக்கையுடன் கேளுங்கள்: துஆ நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியாக நம்புங்கள் தாமதம் ஏற்பட்டாலும் அது நல்லதற்கே “யா அல்லாஹ், எனக்கு ஹலாலான, பரக்கத்துடன் கூடிய அபாரமான...

நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்





பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்





1. அஸ்தஹஃபீருல்லாஹ ரப்பி மின் குல்லி தன்பின் வ அதுவ்ப் இலைஹி


2. சூரா இக்லாஸ் 21 முறை


بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 112:0)

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
குல் ஹுவல் லாஹு அஹத்
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)

اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
அல்லாஹ் ஹுஸ்-ஸமத்
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)

لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
லம் யலித் வ லம் யூலத்
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
வ லம் யகுல்-லஹூ குFபுவன் அஹத்
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)




3. சூரா நஸ்ர் 21 முறை

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 110:0)

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ‏
இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
(அல்குர்ஆன் : 110:1)

وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ‏
வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
(அல்குர்ஆன் : 110:2)

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)



4. அல்லாஹும்ம இன்னக்க அன்தத் சமது ரப்பு குல்லி ல் மஸ்துரி வஅன்தல் கபிர்

Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா