23. அல் முஃமினூன் (விசுவாசிகள்)
- Get link
- X
- Other Apps
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 23:0)
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ
கத் அFப்லஹல் மு'மினூன்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
(அல்குர்ஆன் : 23:1)
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ
அல்லதீன ஹும் Fபீ ஸலாதிஹிம் காஷி'ஊன்
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:2)
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
வல்லதீன ஹும் 'அனில்லக்விமுஃரிளூன்
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:3)
وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ
வல்லதீன ஹும் லிZஜ் Zஜகாதி Fபா'இலூன்
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
(அல்குர்ஆன் : 23:4)
وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ
வல்லதீன ஹும் லிFபுரூ ஜிஹிம் ஹாFபிளூன்
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 23:5)
اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ
இல்லா 'அலா அZஜ்வாஜிஹிம் அவ் மா மலகத் அய்மானுஹும் Fப இன்னஹும் கய்ரு மலூமீன்
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:6)
فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ
FபமனிBப் தகா வரா'அ தாலிக Fப உலா'இக ஹுமுல் 'ஆதூன்
ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 23:7)
وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ
வல்லதீன ஹும் லி அமானாதிஹிம் வ 'அஹ்திஹிம் ரா'ஊன்
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:8)
وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَۘ
வல்லதீன ஹும் 'அலா ஸலவாதிஹிம் யுஹாFபிளூன்
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:9)
اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ
உலா'இக ஹுமுல் வாரிதூன்
இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
(அல்குர்ஆன் : 23:10)
الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
அல்லதீன யரிதூனல் Fபிர்தவ்ஸ ஹும் Fபீஹா காலிதூன்
இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:11)
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ
வ லகத் கலக்னல் இன்ஸான மின் ஸுலாலதிம் மின்தீன்
நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
(அல்குர்ஆன் : 23:12)
ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ
தும்ம ஜ'அல்னாஹு னுத்Fபதன் Fபீ கராரிம் மகீன்
பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.
(அல்குர்ஆன் : 23:13)
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ
தும்ம கலக்னன் னுத்Fபத 'அலகதன் Fபகலக்னல் 'அலகத முள்கதன் Fபகலக் னல் முள்கத 'இளாமன் Fபகஸவ்னல் 'இளாம லஹ்மன் தும்ம அன்ஷானாஹு கல்கன் ஆகர்; FபதBபாரகல் லாஹு அஹ்ஸனுல் காலிகீன்
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
(அல்குர்ஆன் : 23:14)
ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَيِّتُوْنَ
தும்ம இன்னகும் Bபஃத தாலிக ல மய்யிதூன்
பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள்.
(அல்குர்ஆன் : 23:15)
ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ تُبْعَثُوْنَ
தும்ம இன்னகும் யவ்மல் கியாமதி துBப்'அதூன்
பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 23:16)
وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآٮِٕقَ وَمَا كُنَّا عَنِ الْخَـلْقِ غٰفِلِيْنَ
வ லகத் கலக்னா Fபவ்ககும் ஸBப்'அ தரா'இக வமா குன்னா 'அனில் கல்கி காFபிலீன்
அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை.
(அல்குர்ஆன் : 23:17)
وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ وَاِنَّا عَلٰى ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ
வ அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அம் Bபிகதரின் Fப-அஸ்கன்னாஹு Fபில் அர்ளி வ இன்னா 'அலா தஹாBபிம் Bபிஹீ லகா திரூன்
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
(அல்குர்ஆன் : 23:18)
فَاَنْشَاْنَا لَـكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّ اَعْنَابٍ ۘ لَـكُمْ فِيْهَا فَوَاكِهُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ
Fப அன்ஷானா லகும் Bபிஹீ ஜன்னாதிம் மின் னகீலி(ன்)வ் வ அஃனாBப்; லகும் Fபீஹா Fபவாகிஹு கதீரது(ன்)வ் வ மின்ஹா தாகுலூன்
அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 23:19)
وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَآءَ تَنْبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِيْنَ
வ ஷஜரதன் தக்ருஜு மின் தூரி ஸய்னா'அ தம்Bபுது Bபித்துஹ்னி வ ஸிBப்கில் லில் ஆகிலீன்
இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
(அல்குர்ஆன் : 23:20)
وَ اِنَّ لَـكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهَا وَلَـكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ
வ இன்ன லகும் Fபில் அன்'ஆமி ல'இBப்ரஹ்; னுஸ்கீகும் மிம்மா Fபீ Bபுதூனிஹா வ லகும் Fபீஹா மனாFபி'உ கதீரது(ன்)வ் வ மின்ஹா தாகுலூன்
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 23:21)
وَعَلَيْهَا وَعَلَى الْـفُلْكِ تُحْمَلُوْنَ
வ 'அலய்ஹா வ'அலல் Fபுல்கி துஹ்மலூன்
மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 23:22)
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ اَفَلَا تَتَّقُوْنَ
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃBபுதுல் லாஹ மா லகும் மின் இலஹின் கய்ருஹூ அFபலா தத்தகூன்
இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) “என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் - அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 23:23)
فَقَالَ الْمَلَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يُرِيْدُ اَنْ يَّـتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰٓٮِٕكَةً مَّا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ
Fபகாலல் மல'உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ மா ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் யுரீது அய் யதFபள்ளல 'அலய்கும் வ லவ் ஷா'அல் லாஹு ல அன்Zஜல மலா'இகதம் மா ஸமிஃனா Bபிஹாதா Fபீ ஆBபா'இனல் அவ்வலீன்
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 23:24)
اِنْ هُوَ اِلَّا رَجُلٌ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰى حِيْنٍ
இன் ஹுவ இல்லா ரஜுலும் Bபிஹீ ஜின்னதுன் FபதரBப்Bபஸூ Bபிஹீ ஹத்தா ஹீன்
“இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்).
(அல்குர்ஆன் : 23:25)
قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ
கால ரBப்Bபின் ஸுர்னீ Bபிமா கத்தBபூன்
“என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 23:26)
فَاَوْحَيْنَاۤ اِلَيْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَ وَحْيِنَا فَاِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّـنُّوْرُۙ فَاسْلُكْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا اِنَّهُمْ مُّغْرَقُوْنَ
Fப அவ்ஹய்னா இலய்ஹி அனிஸ் ன'இல் Fபுல்க Bபி அஃயுனினா வ வஹ்யினா Fப இதா ஜா'அ அம்ருனா வ Fபாரத் தன்னூரு Fபஸ்லுக் Fபீஹா மின் குல்லின் Zஜவ்ஜய்னித் னய்னி வ அஹ்லக இல்லா மன் ஸBபக 'அலய்ஹில் கவ்லு மின்ஹும் வலா துகாதிBப்னீ Fபில் லதீன ளலமூ இன்னாஹும் முக்ரகூன்
அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.
(அல்குர்ஆன் : 23:27)
فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْـفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
Fப இதஸ் தவய்த அன்த வ மம் ம'அக 'அலல் Fபுல்கி Fபகுலில் ஹம்து லில்லாஹில் லதீ னஜ்ஜானா மினல் கவ்மிள் ளாலிமீன்
“நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் : 23:28)
وَقُلْ رَّبِّ اَنْزِلْنِىْ مُنْزَلًا مُّبٰـرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ
வ குர் ரBப்Bபி அன்Zஜில்னீ முன்Zஜலம் முBபாரக(ன்)வ் வ அன்த கய்ருல் முன்Zஜிலீன்
மேலும் “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).
(அல்குர்ஆன் : 23:29)
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِيْنَ
இன்ன Fபீ தாலிக ல ஆயாதி(ன்)வ் வ இன் குன்னா லமுBப்தலீன்
நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; நாம் (இவ்வாறே மனிதர்களைச்) சோதிப்பவராக இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 23:30)
ثُمَّ اَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ
தும்மா அன்ஷான மிம் Bபஃதிஹிம் கர்னன் ஆகரீன்
பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம்.
(அல்குர்ஆன் : 23:31)
فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ اَفَلَا تَتَّقُوْنَ
Fப அர்ஸல்னா Fபீஹிம் ரஸூலம் மின்ஹும் அனிஃBபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ அFபலா தத்தகூன்
அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” (என்றும் அவர் கூறினார்.)
(அல்குர்ஆன் : 23:32)
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَآءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ۙ
வ காலல் மல-உ மின் கவ்மிஹில் லதீன கFபரூ வ கத்தBபூ Bபி லிகா'இல் ஆகிரதி வ அத்ரFப்னாஹும் Fபில் ஹயாதித் துன்யா மா ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் யாகுலு மிம்மா தாகுலூன மின்ஹு வ யஷ்ரBபு மிம்மா தஷ்ரBபூன்
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும், இறுதித் தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
(அல்குர்ஆன் : 23:33)
وَلَٮِٕنْ اَطَعْتُمْ بَشَرًا مِّثْلَـكُمْ اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَۙ
வ ல'இன் அதஃதும் Bபஷரம் மித்லகும் இன்னகும் இதல் லகாஸிரூன்
எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!
(அல்குர்ஆன் : 23:34)
اَيَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۙ
அ-ய'இதுகும் அன்னகும் இதா மித்தும் வ குன்தும் துராBப(ன்)வ் வ இளாமன் அன்னகும் முக்ரஜூன்
“நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?
(அல்குர்ஆன் : 23:35)
هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۙ
ஹய்ஹாத ஹய்ஹாத லிமா தூ'அதூன்
“(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)
(அல்குர்ஆன் : 23:36)
اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۙ
இன் ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா னமூது வ னஹ்யா வமா னஹ்னு BபிமBப்'ஊதீன்
“நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.
(அல்குர்ஆன் : 23:37)
اِنْ هُوَ اِلَّا رَجُلُ اۨفْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِيْنَ
இன் ஹுவ இல்லா ரஜுலுனிFப் தரா 'அலல் லாஹி கதிBப(ன்)வ் வமா னஹ்னுஉ லஹூ Bபிமு'மினீன்
“இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டும் மனிதரேயன்றி வேறில்லை - எனவே இவரை நாம் நம்பமாட்டோம்” என்று (கூறினர்).
(அல்குர்ஆன் : 23:38)
قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ
கால ரBப்Bபின் ஸுர்னீ Bபிமா கத்தBபூன்
“என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 23:39)
قَالَ عَمَّا قَلِيْلٍ لَّيُصْبِحُنَّ نٰدِمِيْنَ
கால 'அம்மா கலீலில் ல யுஸ்Bபிஹுன்ன னாதிமீன்
“சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 23:40)
فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَـقِّ فَجَعَلْنٰهُمْ غُثَآءً فَبُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ
Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது Bபில்ஹக்கி Fபஜ'அல்னாஹும் குதா'ஆ; FபBபுஃதல் லில்கவ் மிள் ளாலிமீன்
அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது; நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலே ஆகிவிட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:41)
ثُمَّ اَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِيْنَ
தும்ம அன்ஷானா மிம் Bபஃதிஹிம் குரூனன் ஆகரீன்
அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.
(அல்குர்ஆன் : 23:42)
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَـاْخِرُوْنَ
மா தஸ்Bபிகு மின் உம்மதின் அஜலஹா வமா யஸ்தாகிரூன்
எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:43)
ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْـرَا كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ فَاَتْبَـعْنَا بَعْـضَهُمْ بَعْـضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ فَبُـعْدًا لِّـقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ
தும்ம அர்ஸல்னா ருஸுலனா தத்ரா குல்ல மா ஜா'அ உம்மதர் ரஸூலுஹா கத்தBபூஹ்; Fப அத்Bபஃனா Bபஃளஹும் Bபஃள(ன்)வ் வ ஜ'அல்னாஹும் அஹாதீத்; FபBபுஃதல் லிகவ்மில் லா யு'மினூன்
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.
(அல்குர்ஆன் : 23:44)
ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰى وَاَخَاهُ هٰرُوْنَ ۙ بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ
தும்ம அர்ஸல்னா மூஸா வ அகாஹு ஹாரூன Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
(அல்குர்ஆன் : 23:45)
اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ٮِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عٰلِيْنَ
இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் 'ஆலீன்
ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 23:46)
فَقَالُـوْۤا اَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَـنَا عٰبِدُوْنَ
Fபகாலூ அன்னு'மினு லிBபஷரய்னி மித்லினா வ கவ்முஹுமா லனா 'ஆBபிதூன்
எனவே: “நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!” எனக் கூறினர்.
(அல்குர்ஆன் : 23:47)
فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَـكِيْنَ
Fபகத்தBபூஹுமா Fபகானூ மினல் முஹ்லகீன்
ஆகவே இவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; (அதன் விளைவாய்) அவர்கள் அழிந்தோராயினர்.
(அல்குர்ஆன் : 23:48)
وَلَـقَدْ اٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப ல'அல்லஹும் யஹ்ததூன்
(தவிர) அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தையும் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 23:49)
وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗۤ اٰيَةً وَّاٰوَيْنٰهُمَاۤ اِلٰى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيْنٍ
வ ஜ'அல்னBப் ன மர்யம வ உம்மஹூ ஆயதன்(ன்)வ் வ ஆவய்னாஹுமா இலா ரBப்வதின் தாதி கராரி(ன்)வ் வ ம'ஈன்
மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்; அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 23:50)
يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
யா அய்யுஹர் ருஸுலு குலூ மினத் தய்யிBபாதி வஃமலூ ஸாலிஹன் இன்னீ Bபிமா தஃமலூன 'அலீம்
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
(அல்குர்ஆன் : 23:51)
وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ
வ இன்ன ஹாதிஹீ உம்மதுகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ அன ரBப்Bபுகும் Fபத்தகூன்
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
(அல்குர்ஆன் : 23:52)
فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ
Fபதகத்த'ஊ அம்ரஹும் Bபய்னஹும் ZஜுBபுரா; குல்லு ஹிZஜ்Bபிம் Bபிமா லதய்ஹிம் Fபரிஹூன்
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 23:53)
فَذَرْهُمْ فِىْ غَمْرَتِهِمْ حَتّٰى حِيْنٍ
Fபதர்ஹும் Fபீ கம்ரதிஹிம் ஹத்தா ஹீன்
எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
(அல்குர்ஆன் : 23:54)
اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ
அ-யஹ்ஸBபூன அன்ன்னமா னுமிதுஹும் Bபிஹீ மிம்மாலி(ன்)வ் வ Bபனீன்
அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
(அல்குர்ஆன் : 23:55)
نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْـرٰتِ بَلْ لَّا يَشْعُرُوْنَ
னுஸாரி'உ லஹும் Fபில் கய்ராத்; Bபல் லா யஷ்'உரூன்
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
(அல்குர்ஆன் : 23:56)
اِنَّ الَّذِيْنَ هُمْ مِّنْ خَشْيَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۙ
இன்னல் லதீன ஹும் மின் கஷ்யதி ரBப்Bபிஹிம் முஷ்Fபிகூன்
நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-
(அல்குர்ஆன் : 23:57)
وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَۙ
வல்லதீன ஹும் Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் யு'மினூன்
இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்-
(அல்குர்ஆன் : 23:58)
وَالَّذِيْنَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُوْنَۙ
வல்லதீன ஹும் Bபி ரBப்Bபிஹிம் லா யுஷ்ரிகூன்
இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-
(அல்குர்ஆன் : 23:59)
وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّ قُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰى رَبِّهِمْ رٰجِعُوْنَ ۙ
வல்லதீன யு'தூன மா ஆதவ் வ குலூBபுஹும் வஜிலதுன் அன்னஹும் இலா ரBப்Bபிஹிம் ராஜி'ஊன்
இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
(அல்குர்ஆன் : 23:60)
اُولٰٓٮِٕكَ يُسَارِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ
உலா'இக யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ ஹும் லஹா ஸாBபிகூன்
இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:61)
وَلَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا كِتٰبٌ يَّـنْطِقُ بِالْحَـقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
வ லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா வ லதய்னா கிதாBபு(ன்)ய் யன்திகு Bபில்ஹக்கி வ ஹும் ல யுள்லமூன்
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
(அல்குர்ஆன் : 23:62)
بَلْ قُلُوْبُهُمْ فِىْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ
Bபல் குலூBபுஹும் Fபீ கம்ரதிம் மின் ஹாதா வ லஹும் அஃமாலும் மின் தூனி தாலிக ஹும் லஹா 'ஆமிலூன்
ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
(அல்குர்ஆன் : 23:63)
حَتّٰۤى اِذَاۤ اَخَذْنَا مُتْـرَفِيْهِمْ بِالْعَذَابِ اِذَا هُمْ يَجْــٴَــرُوْنَ
ஹத்தா இதா அகத்னா முத்ரFபீஹிம் Bபில்'அதாBபி இதா ஹும் யஜ்'அரூன்
(இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
(அல்குர்ஆன் : 23:64)
لَا تَجْــٴَــرُوا الْيَوْمَ اِنَّكُمْ مِّنَّا لَا تُنْصَرُوْنَ
லா தஜ்'அருல் யவ்ம இன்னகும் மின்னா லா துன்ஸரூன்
“இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 23:65)
قَدْ كَانَتْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَـكُنْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ تَـنْكِصُوْنَۙ
கத் கானத் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபகுன்தும் 'அலா அஃகாBபிகும் தன்கிஸூன்
என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன; ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
(அல்குர்ஆன் : 23:66)
مُسْتَكْبِرِيْنَ بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ
முஸ்தக்Bபிரீன Bபிஹீ ஸாமிரன் தஹ்ஜுரூன்
ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).
(அல்குர்ஆன் : 23:67)
اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ يَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِيْنَ
அFபலம் யத்தBப்Bபர்ருல் கவ்ல அம் ஜா'அஹும் மா லம் யாதி ஆBபா'அஹுமுல் அவ்வலீன்
(குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?
(அல்குர்ஆன் : 23:68)
اَمْ لَمْ يَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ
அம் லம் யஃரிFபூ ரஸூலஹும் Fபஹும் லஹூ முன்கிரூன்
அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?
(அல்குர்ஆன் : 23:69)
اَمْ يَـقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ بَلْ جَآءَهُمْ بِالْحَـقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ
அம் யகூலூன Bபிஹீ ஜின்ன்னஹ்; Bபல் ஜா'அஹும் Bபில்ஹக்கி வ அக்தருஹும் லில் ஹக்கி காரிஹூன்
அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 23:70)
وَلَوِ اتَّبَعَ الْحَـقُّ اَهْوَآءَهُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ بَلْ اَتَيْنٰهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُّعْرِضُوْنَ
வ லவித் தBப'அல் ஹக்கு அஹ்வா'அஹும் லFபஸததிஸ் ஸமாவாது வல் அர்ளு வ மன் Fபீஹின்ன்ன்; Bபல் அதய்னாஹும் Bபிதிக்ரிஹிம் Fபஹும் 'அன் திக்ரிஹிம் முஃரிளூன்
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை - குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை - குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 23:71)
اَمْ تَسْـٴَــلُهُمْ خَرْجًا فَخَرٰجُ رَبِّكَ خَيْرٌ وَّهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ
அம் தஸ்'அலுஹும் கர்ஜன் Fபகராஜு ரBப்Bபிக கய்ரு(ன்)வ் வ ஹுவ கய்ருர் ராZஜிகீன்
அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது - இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.
(அல்குர்ஆன் : 23:72)
وَاِنَّكَ لَـتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
வ இன்னக லதத்'ஊஹும் இலா ஸிராதிம் முஸ்தகீம்
மேலும், நிச்சயமாக நீர் அவர்களை - ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
(அல்குர்ஆன் : 23:73)
وَاِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَـنٰكِبُوْنَ
வ இன்ன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி 'அனிஸ் ஸிராதி லனாகிBபூன்
இன்னும் எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்) வழியை விட்டு விலகியவர் ஆவார்.
(அல்குர்ஆன் : 23:74)
وَلَوْ رَحِمْنٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِّنْ ضُرٍّ لَّـلَجُّوْا فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ
வ லவ் ரஹிம்னாஹும் வ கஷFப்னா மா Bபிஹிம் மின் ளுர்ரில் லலஜ்ஜூ Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 23:75)
وَلَقَدْ اَخَذْنٰهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوْا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُوْنَ
வ லகத் அகத்னாஹும் Bபில்'அதாBபி Fபமஸ்தகானூ லி ரBப்Bபிஹிம் வமா யதளர்ர'ஊன்
திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை.
(அல்குர்ஆன் : 23:76)
حَتّٰٓى اِذَا فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا ذَا عَذَابٍ شَدِيْدٍ اِذَا هُمْ فِيْهِ مُبْلِسُوْنَ
ஹத்தா இதா Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபன் தா 'அதாBபின் ஷதீதின் இதா ஹும் Fபீஹி முBப்லிஸூன்
எதுவரையிலெனின், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால், அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.
(அல்குர்ஆன் : 23:77)
وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ
வ ஹுவல் லதீ அன்ஷ அ-லகுமுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வல் அFப்'இதஹ்; கலீலம் மா தஷ்குரூன்
இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 23:78)
وَهُوَ الَّذِىْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ
வ ஹுவல் லதீ தர அகும் Fபில் அர்ளி வ இலய்ஹி துஹ்ஷரூன்
மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 23:79)
وَهُوَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُ وَلَـهُ اخْتِلَافُ الَّيْلِ وَالنَّهَارِ اَفَلَا تَعْقِلُوْنَ
வ ஹுவல் லதீ யுஹ்யீ வ யுமீது வ லஹுக் திலாFபுல் லய்லி வன்னஹார்; அFபலா தஃகிலூன்
அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
(அல்குர்ஆன் : 23:80)
بَلْ قَالُوْا مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ
Bபல் காலூ மித்ல மா காலல் அவ்வலூன்
மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப் போலவே, இவர்களும் கூறுகிறார்கள்.
(அல்குர்ஆன் : 23:81)
قَالُوْۤا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ
காலூ 'அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ-இன்னா லமBப் 'ஊதூன்
“நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 23:82)
لَـقَدْ وُعِدْنَا نَحْنُ وَاٰبَآؤُنَا هٰذَا مِنْ قَبْلُ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ
லகத் வு'இத்னா னஹ்னு வ ஆBபா'உனா ஹாதா மின் கBப்லு இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
“மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).
(அல்குர்ஆன் : 23:83)
قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
குல் லிமனில் அர்ளு வ மன் Fபீஹா இன் குன்தும் தஃலமூன்
“நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக!
(அல்குர்ஆன் : 23:84)
سَيَقُوْلُوْنَ لِلّٰهِ قُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ
ஸ-யகூலூன லில்லாஹ்; குல் அFபலா ததக்க்கரூன்
“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் : 23:85)
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
குல் மர் ரBப்Bபுஸ் ஸமாவாதிஸ் ஸBப்'இ வ ரBப்Bபுல் 'அர்ஷில் 'அளீம்
“ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.
(அல்குர்ஆன் : 23:86)
سَيَقُوْلُوْنَ لِلّٰهِ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ
ஸ யகூலூன லில்லாஹ்; குல் அFபலா தத்தகூன்
“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் : 23:87)
قُلْ مَنْ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَىْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
குல் மம் Bபி யதிஹீ மலகூது குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுவ யுஜீரு வலா யுஜாரு 'அலய்ஹி இன் குன்தும் தஃலமூன்
“எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.
(அல்குர்ஆன் : 23:88)
سَيَقُوْلُوْنَ لِلّٰهِ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ
ஸ யகூலூன லில்லாஹ்; குல் Fப அன்னா துஸ் ஹரூன்
அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.
(அல்குர்ஆன் : 23:89)
بَلْ اَتَيْنٰهُمْ بِالْحَـقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ
Bபல் அதய்னாஹும் Bபில் ஹக்கி வ இன்னஹும் லகாதிBபூன்
எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 23:90)
مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ
மத் தகதல் லாஹு மி(ன்)வ் வலதி(ன்)வ் வமா கான ம'அஹூ மின் இலாஹ்; இதல் லதஹBப குல்லு இலாஹிம் Bபிமா கலக வ ல'அலா Bபஃளுஹும் 'அலா Bபஃள்; ஸுBப்ஹான்னல் லாஹி 'அம்மா யஸிFபூன்
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
(அல்குர்ஆன் : 23:91)
عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
'ஆலிமில் கய்Bபி வஷ் ஷஹ்ஹாததி Fபத'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
அவன் மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன்; எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
(அல்குர்ஆன் : 23:92)
قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ
குர் ரBப்Bபி இம்ம்மா துரியன்னீ மா யூ'அதூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்:
(அல்குர்ஆன் : 23:93)
رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ
ரBப்Bபி Fபலா தஜ்'அல்னீ Fபில் கவ்மிள் ளாலிமீன்
“என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக” என்று.
(அல்குர்ஆன் : 23:94)
وَاِنَّا عَلٰٓى اَنْ نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقٰدِرُوْنَ
வ இன்னா 'அலா அன் னுரியக மா ன'இதுஹும் லகாதிரூன்
இன்னும், நிச்சயமாக, அவர்களுக்கு வாக்களிப்பதை (வேதனையை) உமக்குக் காண்பிக்க ஆற்றலுடையோம் நாம்.
(அல்குர்ஆன் : 23:95)
اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ السَّيِّئَةَ نَحْنُ اَعْلَمُ بِمَا يَصِفُوْنَ
இத்Fபஃ Bபில்லதீ ஹிய அஹ்ஸனுஸ் ஸய்யி'அஹ்; னஹ்னு அஃலமு Bபிமா யஸிFபூன்
(நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.
(அல்குர்ஆன் : 23:96)
وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ
வ குர் ரBப்Bபி அ'ஊது Bபிக மின் ஹமZஜாதிஷ் ஷயாதீன்
இன்னும்: நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்)
(அல்குர்ஆன் : 23:97)
وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ
வ அ'ஊது Bபிக ரBப்Bபி அய்-யஹ்ளுரூன்
“இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!
(அல்குர்ஆன் : 23:98)
حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ
ஹத்தா இதா ஜா'அ அஹத ஹுமுல் மவ்து கால ரBப்Bபிர் ஜி'ஊன்
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 23:99)
لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ كَلَّا اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
ல'அல்லீ அஃமலு ஸாலிஹன் Fபீமா தரக்து கல்லா; இன்னஹா கலிமதுன் ஹுவ கா'இலுஹா வ மி(ன்)வ் வரா'இஹிம் Bபர்Zஜகுன் இலா யவ்மி யுBப்'அதூன்
“நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
(அல்குர்ஆன் : 23:100)
فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَٮِٕذٍ وَّلَا يَتَسَآءَلُوْنَ
Fப இதா னுFபிக Fபிஸ் ஸூரி Fபலா அன்ஸாBப Bபய்னஹும் யவ்ம'இதி(ன்)வ் வலா யதஸா'அலூன்
எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:101)
فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
Fபமன் தகுலத் மவாZஜீ னுஹூ Fப உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
(அல்குர்ஆன் : 23:102)
وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ جَهَـنَّمَ خٰلِدُوْنَ
வ மன் கFப்Fபத் மவா Zஜீனுஹூ Fப உலா'இகல் லதீன கஸிரூ 'அன்Fபுஸஹும் Fபீ ஜஹன்னம காலிதூன்
ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
(அல்குர்ஆன் : 23:103)
تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كٰلِحُوْنَ
தல்Fபஹு வுஜூஹஹுமுன் னாரு வ ஹும் Fபீஹா காலிஹூன்
(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:104)
اَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ
அலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபகுன்தும் Bபிஹா துகத்திBபூன்
“என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்” (என்று கூறப்படும்)
(அல்குர்ஆன் : 23:105)
قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّيْنَ
காலூ ரBப்Bபனா கலBபத் 'அலய்னா ஷிக்வதுனா வ குன்னா கவ்மன் ளால்லீன்
“எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:106)
رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ
ரBப்Bபனா அக்ரிஜ்னா மின்ஹா Fப இன் 'உத்னா Fப இன்னா ளாலிமூன்
“எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக! திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)
(அல்குர்ஆன் : 23:107)
قَالَ اخْسَــٴُــوْا فِيْهَا وَلَا تُكَلِّمُوْنِ
காலக் ஸ'ஊ Fபீஹா வலா துகல்லிமூன்
(அதற்கவன்) “அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 23:108)
اِنَّهٗ كَانَ فَرِيْقٌ مِّنْ عِبَادِىْ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ
இன்னஹூ கான Fபரீகும் மின் 'இBபாதீ யகூலூன ரBப்Bபனா ஆமன்னா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருர் ராஹிமீன்
நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
(அல்குர்ஆன் : 23:109)
فَاتَّخَذْتُمُوْهُمْ سِخْرِيًّا حَتّٰٓى اَنْسَوْكُمْ ذِكْرِىْ وَكُنْتُمْ مِّنْهُمْ تَضْحَكُوْنَ
Fபத்தகத்துமூஹும் ஸிக்ரிய்யன் ஹத்தா அன்ஸவ்கும் திக்ரீ வ குன்தும் மின்ஹும் தள்ஹகூன்
அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று; இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.
(அல்குர்ஆன் : 23:110)
اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ
இன்னீ ஜZஜய்துஹுமுல் யவ்ம Bபிமா ஸBபரூ அன்னஹும் ஹுமுல் Fபா'இZஜூன்
நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!”
(அல்குர்ஆன் : 23:111)
قٰلَ كَمْ لَبِثْتُمْ فِى الْاَرْضِ عَدَدَ سِنِيْنَ
கால கம் லBபித்தும் Fபில் அர்ளி 'அதத ஸினீன்
“ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” என்று கேட்பான்.
(அல்குர்ஆன் : 23:112)
قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ فَسْـٴَــلِ الْعَآدِّيْنَ
காலூ லBபித்னா யவ்மன் அவ் Bபஃள யவ்மின் Fபஸ்'அலில் 'ஆத்தீன்
“ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:113)
قٰلَ اِنْ لَّبِثْـتُمْ اِلَّا قَلِيْلًا لَّوْ اَنَّكُمْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
கால இல் லBபித்தும் இல்லா கலீலல் லவ் அன்னகும் குன்தும் தஃலமூன்
“ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!” என்று (இறைவன்) கூறுவான்.
(அல்குர்ஆன் : 23:114)
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ
அFபஹஸிBப்தும் அன்னமா கலக்னாகும் 'அBபத(ன்)வ் வ அன்னகும் இலய்னா லா துர்ஜ'ஊன்
“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)
(அல்குர்ஆன் : 23:115)
فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ
Fபத'ஆலல் லாஹுல் மலிகுல் ஹக்க்; லா இலாஹ இல்லா ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் கரீம்
ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!
(அல்குர்ஆன் : 23:116)
وَمَنْ يَّدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۙ لَا بُرْهَانَ لَهٗ بِهٖۙ فَاِنَّمَا حِسَابُهٗ عِنْدَ رَبِّهٖ اِنَّهٗ لَا يُفْلِحُ الْـكٰفِرُوْنَ
வ மய் யத்'உ ம'அல்லாஹி இலாஹன் ஆகர லா Bபுர்ஹான லஹூ Bபிஹீ Fப இன்ன மா ஹிஸாBபுஹூ 'இன்த ரBப்Bபிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுல் காFபிரூன்
மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை; அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது; நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:117)
وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ
வ குல் ரBப்Bபிக் Fபிர் வர்ஹம் வ அன்த கய்ருர் ராஹிமீன்
இன்னும், “என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
(அல்குர்ஆன் : 23:118)
- Get link
- X
- Other Apps
